பூஜையறை ஏன் சாஸ்திர முறையில் அமைக்கப்பட வேண்டும்.

Date:

பூஜையறையை சரியான திசையில் அமைக்கப்பட வேண்டும் என சொல்லுகிறது ஜோதிட சாஸ்திரம்.

பூஜையறை இருக்க வேண்டிய திசைகள்.

  1. தென்கிழக்கு பகுதி
  2. வடமேற்கு பகுதி
  3. தெற்கு நடுப்பகுதி
  4. மேற்கு நடுப்பகுதி

இந்த இடங்களில் மட்டுமே பூஜையறை வரவேண்டும். இந்தப் பகுதியில் வரக்கூடிய பூஜையறையினால் மட்டுமே பல நன்மைகள் வந்து சேரும்.

வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பூஜையறை வைப்பதால் ஏற்படும் விளைவுகள்…

  1. ஆண்கள் நல்ல வேலைக்கு போகமுடியாத நிலை ஏற்படும். சில சமயம் ஆண்களுக்கு வேலையே இல்லாமல் கூட போக நேரிடும்.
  2. குடும்ப உறவுகளில் பிரிவினை ஏற்படும். அதாவது தந்தை, மகன் உறவு பாதிப்பு, கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உருவாகும்.
  3. உடல் நிலை பாதிப்பு, விபத்து போன்றவைகள் கூட ஏற்பட வாய்ப்புண்டு.
  4. குழந்தை பிறப்பு தள்ளிப் போதல், தத்து எடுக்கும் சூழ்நிலை கூட ஏற்படலாம்.
  5. வியாபாரத்தில் நஷ்டம் அல்லது வியாபாரம் தொடர்ந்து செய்ய முடியாமல் போவது.
  6. கடன் சுமை, கொடுக்கல் வாங்கலில் சிக்கல்.
  7. வெளியூர் அல்லது வெளிநாட்டிலேயே கணவன் தங்கிவிடுவது.
  8. பில்லி சூனியம், செய்வினை மீது தேவையற்ற நம்பிக்கை வைப்பது.
  9. வீட்டில் உள்ள பெண்கள் எப்பொழுதுமே கோயில் கோயிலாகச் சுற்றுவது.
  10. தன்னுடைய சொத்தை அல்லது தன்னுடைய முழு வருமானத்தை கோவிலுக்கோ, மடத்துக்கோ எழுதி வைப்பது போன்றவைகள் நடக்க நேரிடும்.

வீட்டில் பூஜையறை வைக்கும் முன்பு அனுபவம் வாய்ந்த வாஸ்து நிபுணரின் ஆலோசனைக்குப் பிறகு வைப்பது சிறப்பு.

spot_imgspot_img

More like this
Related

இன்றைய ராசி பலன் | 10.08.2026

♈ மேஷம்: புதிய வாய்ப்புகள் கிடைக்கும் நாள். பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். ♉...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்