புங்குடுதீவில் சினைப் பசுவை இறைச்சிக்காக வெட்டிய கும்பல் கைது

Date:

புங்குடுதீவு பதினொராம் வட்டாரத்தில் வாழ்ந்து வருகின்ற சண்முகம் என்பவருக்கு சொந்தமான சினைப்பசுவொன்று இறைச்சிக்காக கடத்தப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக நேற்று காலையில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் அவர்களிடம் தகவல் வழங்கப்பட்டிருந்தது.

விரைந்து செயற்பட பிரதேச சபை உறுப்பினர் நாவலன் குறிகாட்டுவான் பொலிஸ் நிலையத்தினரை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை முன்னெடுக்க ஒத்துழைப்பு நல்கியிருந்தார். அத்தோடு பாதிக்கப்பட்டவரின் சகோதரரான நாகராசாவுக்கு சொந்தமான பசுவொன்றும் சம்பவ இடத்திலிருந்து உயிரோடு மீட்கப்பட்டது.

தீவிர விசாரணைகளின் பின்னர் நேற்று மாலை அப்பகுதியில் வாழ்கின்ற கிருபா என்கிற நபர் ஊர்காவற்துறை பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டார்.

இந்நபர் நீண்டகாலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிசார் கூறுகின்றனர். அத்தோடு மேற்படி சினைப் பசுவின் இறைச்சியை விற்பனை செய்வதற்கு உதவியிருந்த இரு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

பசிலின் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகக்...

கிளிநொச்சியில் புலிகளின் முகாமா?: அரசு விளக்கம்!

பளை (Palai) வனப்பகுதிக்குள் புலிகள் இயக்கத்தின் முகாம் ஒன்று இருப்பதாகச் சமூக...

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்