நேற்று 66 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன!

Date:

மேற்கு மாகாணத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது 66 வாகனங்களை பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

பயணக் கட்டுப்பாடுகளை மீறிய குற்றச்சாட்டில் அந்த வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த நடவடிக்கை நடத்தப்பட்டது. கார்கள், வான்கள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், கொள்கலன்கள் மற்றும் ஏனைய வாகனங்கள் என 700 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டன.

இதில், 39 வாகனங்கள் அத்தியாவசியமற்ற நோக்கங்களுக்காக பயணித்ததாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவைகளின் ஈடுபடும் வாகனங்கள் மற்றும் நோயாளிகளைக் கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டுமே இந்த காலகட்டத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

ட்ரோன் கமராக்களின் உதவியுடன் நேற்று பொரளையில் ஒரு சிறப்பு நடவடிக்கை நடத்தப்பட்டது. இதில்தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதற்காக ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்னவுக்கு எதிரான கோட்டா கால நடவடிக்கை அரசியல் ரீதியானது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளான ரவி...

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்