திடீரென வீதியில் ஏற்பட்ட பள்ளம்: நீர்த்தேக்கத்திற்கு ஆபத்தில்லை!

Date:

கொத்மலை நீர்தேக்கத்தின் ஊடாக செல்லும் பிரதான வீதியில் நிலம் தாழிறங்கியுள்ளது.

6 அடி ஆழத்திற்கு வீதி தாழிறங்கியுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் கொத்மலை நீர் தேக்க அணைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

தாழிறங்கிய பகுதியை புனரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

புனரமைக்கப்படும் வரை நீர்தேக்கத்தின் மேல் அமைந்துள்ள வீதியில் வாகன போக்குவரத்திற்கு அனுமதியில்லை என அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த அனர்த்தம் தொடர்பில் பெருந்தெருக்கல் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உரிய நடவடிக்கை எடுப்பதாக தம்மிடம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இன்று (26) குழி ஏற்பட்டுள்ள பகுதியை கண்காணிக்க சென்ற ஜீவன், அங்கிருந்து அமைச்சர் ஜோன்ஸ்டனை தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டு நிலைமையை எடுத்து கூறியுள்ளார்.

இவ்வாறு தெளிவுப்படுத்திய போதே அமைச்சர் மேற்படி விடயத்தை தன்னிடம் கூறியதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் டிரஸ்ட் நிறுவன பணிப்பாளர் பரத் அருள்சாமி, பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி மற்றும் இராணுவ அதிகாரி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

எவ்வாறாயினும் இதனால் கொத்மலை நீர் தேக்க அணைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என நீர்தேக்க பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

க.கிஷாந்தன்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

தில்ஷான் மதுஷங்கவை ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

காயம் காரணமாக விலகிய பிரைடன் கார்ஸுக்குப் பதிலாக தில்ஷான் மதுஷங்கவை சன்ரைசர்ஸ்...

அமெரிக்க முற்றுகையை கடந்து சென்ற ஈரானிய கப்பல்கள்

அமெரிக்க இராணுவத் தடையையும் மீறி, ஈரானியத் துறைமுகங்களிலிருந்து பயணித்த குறைந்தது இரண்டு...

மறுவாழ்வு மையத்தில் சேர்ந்தார் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்ட பாப் பாடகியும் நடிகையுமான பிரிட்னி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்