சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் உபுல் தரங்க!

Date:

இலங்கை அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் உபுல் தரங்க சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

அவர் இன்று மிகச்சுருக்கமாக வெளியிட்ட அறிக்கையில், இந்த முடிவை அறிவித்துள்ளார்.

36 வயதான தரங்க, 2005ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளிற்கு எதிரான ஒருநாள் தொடரில் சர்வதேச அறிமுகத்தை பெற்றார். அதே ஆண்டில், இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் அறிமுகத்தை பெற்றார்.

2017 இல் கடைசி டெஸ்ட்டையும், 2019 இல் கடைசி ஒரு நாள் போட்டிகளையும் ஆடியிருந்தார்.

அறிமுகமாகிய புதிதில் இலங்கையின் எதிர்கால துடுப்பாட்ட நட்சத்திரமாக விதந்தோப்பட்ட போதும், பின்னாளில் அவரது கிரிக்கெட் வாழ்க்கை சீராக இருக்கவில்லை. அடிக்கடி ஆட்ட்த்திறனை இழந்ததால், இறுதிக்காலங்களில் அணியில் இடம்பிடிக்கவில்லை.

இருந்தாலும் இலங்கைக்காக சில காவிய இன்னிங்சையும் அவர் ஆடியுள்ளார். 2006 இல் லீட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்திற்கு எதிராக ஒரு நாள் போட்டியில், 321 என்ற இலங்கை விரட்ட களமிறங்கிய சனத் ஜயசூரியவு- உபுல் ஜோடி முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 286 ஓட்டங்களை பெற்றனர்.

பின்னாளில் அணிக்குள் வருவதும் போவதுமாக இருந்தாலும் அவரால் நிரந்தர இடத்தை பிடிக்க முடியவில்லை.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மட்டு சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்ற சிறைக்கைதி ஒருவர் இன்று வியாழக்கிழமை (14)...

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்