வடமராட்சி கிழக்கில் இளைஞன் மீது புலனாய்வாளர்கள் தாக்குதல்!

Date:

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் புலனாய்வாளர்களின் கடுமையான தாக்குதலால் ஒருவர் பாதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,

கடந்த 20ஆம் திகதி பிற்பகல் வேளை வெற்றிலைக்கேணியில் உள் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞனை மறித்த புலனாய்வாளர்கள் எங்கே சென்று வருகிறாய் என கேட்டுள்ளனர்,

“இது வீதி. இதனால் போய்வர முடியாதா?“ என இளைஞன் கேட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து இளைஞனை விசாரிக்க வேண்டும் என அழைத்துச் சென்று வெற்றிலைக்கேணி சுடலை பகுதியில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். தனது மகனை புலனாய்வாளர்கள் அழைத்துச் சென்றதை கேள்வியுற்ற தாயார் சுடலை பகுதிக்கு ஓடோடி சென்றுள்ளார்.

அங்கு சென்ற தாயை கண்டதும் மகன் விம்மி விம்மி அழுதுள்ளார். ஏன் எனது மகனை அடித்தீர்கள் என புலனாய்வாளர்களை கேட்டதற்கு, தாங்கள் அடிக்கவில்லை என கூறியுள்ளனர்.

மகனை அழைத்துச் சென்ற தாயார் அவரை யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதித்துள்ளார்.

அவர் தற்போது யாழ் போதனா மருத்துவமனை 24 ம் விடுதியில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

“பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை” – திருமாவளவன் திடீர் அறிவிப்பு

“எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை” என விசிக தலைவர்...

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலை நிறுத்தம் இன்றும் தொடரும்!

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தனது நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தத்தை...

வவுனியாவில் கஞ்சாவுடன் 2 பொலிஸ்காரர்கள் கைது!

வவுனியாவில் கஞ்சாவுடன் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்