கருகிய உடல்; அருகில் மண்ணெண்ணெய் கலன்: சுன்னாகத்தில் மீட்கப்பட்ட சடலத்தின் மர்மம் துலங்கியது!

Date:

சுன்னாகம் மயிலங்காடு பகுதியில் இன்று காலை எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பான விசாரணைகளில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மரணம் தற்கொலையென்பது தெரிய வந்துள்ளது.

சுன்னாகம் மயிலங்காடு ஞானவைரவர் கோவில் பின் பகுதியில் எரிந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டது. அதன் பக்கத்தில் மண்ணெண்ணெய் கொள்கலன் ஒன்றும் காணப்பட்டது.

எஸ்.பத்மநாதன் (75) என்ற வயது முதியவரே சடலமாக மீட்கப்பட்டார். அவர் தனிமையில் வாழ்ந்தவர். மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.

இன்று காலை கோயிலுக்கு சென்றவர்கள், சடலத்தை அவதானித்து பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.

இந்த சம்பவத்தில் குற்றச்செயல்கள் தொடர்புபட்டிருக்கலாமென்ற சந்தேகத்தில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், தற்கொலை சம்பவமென்பது தெரிய வந்தது. முதியவர் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி உயிரை மாய்த்தது தெரிய வந்தது.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த அணிதிரளுமாறு ஈழத் தமிழர் முன்னணி கட்சி தலைவர் ஜெயா சரவணன் அழைப்பு

கிழக்கை அழிவுப்பாதைக்கு தள்ளிய தமிழரசு கட்சியின் சுயநல அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து...

திருக்கோணமலையில் PickMe-க்கு எதிர்ப்பு

திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குள் சேவையாற்றும் முச்சக்கர வண்டி...

தலை துண்டிக்கப்படுவதற்கு முன் ஈரானுக்கு கடைசி வாய்ப்பு வழங்கியுள்ளோம்: ட்ரம்ப்

தெஹ்ரான் மறுத்தபோதிலும் ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும், "தலை துண்டிக்கப்படுவதற்கு முன் இதுவே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்