மகளுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்த இளம் தாய்!

Date:

பிபிலை- பெரலியவத்தை கிராமத்தில் வசிக்கும் இளம் தாயொருவர் நேற்று இரவு (21) தனது மூன்று வயது மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பிபிலை பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் பெரலியவத்தையை சேர்ந்த டி.எம்.நதிகா பிரியதர்ஷனி (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குடும்ப தகராறைத் தொடர்ந்து அந்தப் பெண்ணும் அவரது மகளும் வீட்டின் அருகே 40 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்தனர். கிணற்றில் தாய் மற்றும் மகள் இறந்து கிடந்ததை உறவினர்கள் அவதானித்து பிபில பொலிசாருக்கு தெரிவித்தனர்.

இறந்த பெண்ணின் கணவர் ராணுவ வீரர் என்பது தெரிய வந்துள்ளது.

பிபில நீதிவான் சதுர பிரசன்ன அமரதுங்க இன்று (22) இறப்பு குறித்து விசாரணை நடத்த உள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மாளிகைக்காடு மையவாடி விவகாரம்: பள்ளிவாசல் தலைமைகள், பொது அமைப்பினர் மற்றும் ஊர் பிரமுகர்களுடன் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் கலந்துரையாடல்

மாளிகைக்காடு மையவாடி தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும்...

22 வது அரசியலமைப்புத் திருத்தம்: தேசிய நலன், ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் – ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி

இலங்கை அரசினால் முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் அவசரமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்