கொரோனாவால் இறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை உயர்வு எச்சரிக்கும் நிபுணர்கள்எண்ணிக்கை உயர்வு; எச்சரிக்கும் நிபுணர்கள்!

Date:

கொரோனாவால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையால் தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரில் வயது முதியோர் அதிக ஆபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, தடுப்பூசி போடுவது, சிகிச்சை அளிப்பது ஆகியவற்றில் முதியோருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

குழந்தைகள், இளைஞர்களுக்கு கொரோனாவால் ஆபத்து இல்லை என்பதே பொது மனநிலையாக இருக்கிறது. எனினும், பிரேசிலில் அண்மைக்காலமாக கொரோனாவால் குழந்தைகள் இறப்பது அதிகரித்துள்ளது என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசில் முன்னிலையில் இருக்கிறது. இந்நிலையில் பச்சிளங்குழந்தைகள் முதல் சிறுவர்கள் வரை கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பிரேசில் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, கொரோனா பரவத் தொடங்கியது முதல் இதுவரை 832 குழந்தைகள் இறந்துள்ளதாக தெரிகிறது. இவர்கள் அனைவருமே 5 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு

எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை...

முல்லைத்தீவு இ.போ.ச சாலைக்குள் நடந்த அகோர சம்பவம்!

இலங்கை போக்குவரத்துசபையின் முல்லைத்தீவுச்சாலை உதவி முகாமையாளரான பிரதீஸ்குமார் என்பவர், கடமை நேரத்தில்...

யாழ் கோயில் திருவிழாவில் அதிசக்தி மின்விளக்குகள்: கண் பாதிப்பால் 25 பேர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி!

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்