Pagetamil
உலகம்

இரண்டாம் அலை கொரோனா இந்த ஆண்டில் கொடூரமாக இருக்கும் ; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

இந்த ஆண்டில் கொரோனா நெருக்கடி மிக மோசமாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.இரண்டாவது ஆண்டாக கொரோனா வைரஸுடன் உலகமே போராடி வருகிறது. கொரோனா இரண்டாம் அலை தற்போது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், முந்தைய ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டில் கொரோனா மிக அபாயகரமாக இருக்குமென உலக சுகாதார அமைப்பை சேர்ந்த வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம், “கொரோனா கொள்ளை நோயின் முதல் ஆண்டைக் காட்டிலும் இரண்டாம் ஆண்டு மிகக் கொடியதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும் 10 வாரங்கள் இருக்கும் நிலையில் ஜப்பானில் கொரோனா நெருக்கடி மிக மோசமாகியுள்ளது. ஜப்பானில் கூடுதலாக மூன்று பிராந்தியங்களில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலைமை இப்படியிருக்க ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யும்படி கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. ஏற்கெனவே டோக்யோவில் எமர்ஜென்சி அமலில் இருந்த நிலையில் தற்போது ஹிரோஷிமா, ஒகாயமா, ஹொக்கைடோ ஆகிய பகுதிகளிலும் எமர்ஜென்சி அமலுக்கு வந்துள்ளது.

இதையும் படியுங்கள்

ஈரான்-அமெரிக்கா அணுசக்தி பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கும் அப்பாஸ் அரக்சி யார்?

Pagetamil

உக்ரைனில் கைப்பற்றிய பகுதிகளின் உரிமையை ரஷ்யாவிற்கு விட்டுக்கொடுப்பதே போர் நிறுத்தத்திற்கு சிறந்த வழி!

Pagetamil

வரிப் போர்: ஹாலிவுட் படங்களை குறி வைக்கும் சீனா!

Pagetamil

சீனப் பொருட்கள் மீது 125% வரி விதித்த ட்ரம்ப்!

Pagetamil

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!