கட்சியினால் தமக்கு வழங்கப்பட்ட தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான குறித்த காலப்பகுதி நிறைவடைந்ததையடுத்து, அந்தப் பதவியை தொடர்ந்தும் வகிக்காமல் இராஜினாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினால் அமானிதமாக வழங்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியை, தமக்குரிய காலப்பகுதி நிறைவடைந்த பின்னர் மீண்டும் கட்சியிடம் அமானிதமாக ஒப்படைக்கும் வகையில் இந்த இராஜினாமா இடம்பெற்றுள்ளது.
இதன்மூலம், கட்சியின் தீர்மானத்திற்கும் அமானிதப் பொறுப்பிற்கும் மதிப்பளித்து, தமக்கு வழங்கப்பட்டிருந்த தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஸித் விலகியுள்ளார்.
அவரது இராஜினாமாவைத் தொடர்ந்து, குறித்த தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கட்சியினால் தீர்மானிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.




