ஸ்​பெ​யினுக்​குள் ஊடுருவிய மொராக்கோ அகதிகள் உணவு இல்லாமல் மீண்டும் நாடு திரும்பினர்

Date:

ஸ்​பெ​யினுக்​குள் ஊடுரு​விய அகதி​கள் உணவு இல்​லாமல் மீண்​டும் சொந்த நாடான மொராக்​கோவுக்கு திரும்பி உள்​ளனர்.

ஐரோப்​பிய கண்​டத்​தில் அமைந்​துள்ள ஸ்பெ​யினும், ஆப்​பிரிக்க கண்​டத்​தில் உள்ள மொராக்​கோ​வும் அண்டை நாடு​களாக உள்​ளன. முஸ்​லிம் நாடான மொராக்​கோ​வில் வறுமை, வேலை​வாய்ப்​பின்மை அதி​கரித்து வரு​கிறது. இதன்​காரண​மாக மொராக்கோ மக்​கள், வளமான ஸ்பெ​யின் நாட்​டுக்​குள் ஊடுருவ தொடர்ந்து முயற்சி செய்து வரு​கின்​றனர். கடந்த 2021-ம் ஆண்டு மே, ஆகஸ்ட் மாதங்​களில் மொராக்​கோவை சேர்ந்த சுமார் 9,000 பேர் ஸ்பெ​யினுக்​குள் நுழைந்​தனர். அவர்​கள் திருப்பி அனுப்​பப்​பட்​டனர்.

இந்த சூழலில் மொராக்​கோவை சேர்ந்த சுமார் 70,000 பேர் நேற்று முன்​தினம் கடல் வழி​யாக ஸ்பெ​யினின் சியூட்டா நகரில் ஊடுரு​வினர். இதைத் தொடர்ந்து ஸ்பெ​யின் அரசு, ஆயிரக்​கணக்​கான ராணுவ வீரர்​களை சியூட்டா நகருக்கு அனுப்​பியது. ஒட்​டுமொத்த நகர​மும் ராணுவத்​தின் கட்​டுப்​பாட்​டின் கீழ் கொண்டு வரப்​பட்​டது.

இதனிடையே சியூட்​டாவுக்​குள் நுழைந்த அகதி​கள் உணவு தேடி அலைந்​தனர். நகரில் உள்ள பல்​வேறு கடைகள் சூறை​யாடப்​பட்​டன. அங்​குள்ள வீடு​களை சூறை​யாட​வும் அவர்​கள் முயற்சி செய்​தனர். ஆனால் ராணுவ வீரர்​கள் குவிக்​கப்​பட்​ட​தால் அகதி​களால் திருட்​டு, கொள்ளை சம்​பவங்​களில் ஈடுபட முடிய​வில்​லை.

67 பேர் உயிரிழப்பு

ஒரு நாள் முழு​வதும் உணவு கிடைக்​காத நிலை​யில் சுமார் 45,000-க்​கும் மேற்​பட்ட அகதி​கள் மீண்​டும் கடலில் நீந்தி மொராக்​கோவுக்கு திரும்பி சென்று விட்​டனர். மீத​முள்ள அகதி​களை ராணுவ வீரர்​கள் பிடித்து உள்​ளனர். அவர்​களும் மொராக்​கோவுக்கு திருப்பி அனுப்​பப்பட உள்​ளனர்.

இதனிடையே, 67 பேர் கடலில் மூழ்கி உயி​ரிழந்​துள்​ளனர். பலர் படு​கா​யங்​களு​டன் கரையேறி உள்​ளனர். அவர்​களுக்கு மனி​தாபி​மான அடிப்​படை​யில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஸ்பெ​யின் ராணுவ வட்​டாரங்​கள் கூறும்​போது, “பல்​வேறு சவால்​களுக்கு இடை​யில் அகதி​கள் பிரச்​சினைக்கு சுமுக தீர்வு கண்​டுள்​ளோம். பெரும்​பாலான அகதி​கள் மொராக்​கோவுக்கு திரும்பி உள்​ளனர். மீத​முள்ள அகதி​கள் படகு​கள் வாயி​லாக மொராக்​கோவுக்கு திருப்பி அனுப்​பப்​படு​வார்​கள் என்று தெரி​வித்​தனர்​.

spot_imgspot_img

More like this
Related

மஹர சிறைக்கலவரத்தில் ஒருவர் பலி

சனிக்கிழமையன்று மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, ஒரு கைதி உயிரிழந்ததாகவும்,...

பேச்சாளர் மகாவிஷ்ணுவை காதலிப்பதாக நடிகை மிருணாளினி ரவி தகவல்

ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணுவை காதலிப்பதாக நடிகை மிருணாளினி ரவி தெரிவித்துள்ளார். இது குறித்து...

கமேனி கொல்லப்பட்ட சமயத்தில் நடந்தது என்ன?: ஈரான் சபாநாயகர் தகவல்!

ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகரும், உயர்மட்டப் பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாஃப், பெப்ரவரி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்