பெல்லன்விலவில் உணவக உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர், நவகமுவ பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
பெல்லன்விலவில் உள்ள ஒரு உணவகத்தின் முன்பாக நடந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 55 வயதான உணவக உரிமையாளர், களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடமும் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




