இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மாவட்டங்களுக்கு வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, பகல் வேளையில் மனித உடல் உணரும் வெப்பநிலையை குறிக்கும் வெப்பச் சுட்டெண் (Heat Index) சில பகுதிகளில் ‘எச்சரிக்கை (Caution)’ மட்டத்தை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்தவும், நேரடி சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்க்கவும், நாளின் அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் கடுமையான வெளிப்புற உடல் உழைப்புகளை குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் வெளிப்புற வேலைகளில் ஈடுபடுவோர் வெப்பத்தால் ஏற்படக்கூடிய உடல்நலப் பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.




