கடல் மார்க்கமாக இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 5,386 ஷாம்போ பக்கெட்டுகள் தலைமன்னாரில் கடற்படையால் மீட்கப்பட்டன.
13ஆம் திகதி தலைமன்னாரில் உள்ள உருமலை கடற்கரைப் பகுதியில், இலங்கை கடற்படையின் வட மத்திய கடற்படை கட்டளையகத்தின் தமன்ன கடற்படைத் தளம் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது இந்த ஷாம்போ பக்கெட்டுகள் மீட்கப்பட்டன.
மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஷாம்போ பக்கெட்டுகளை தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.




