நீர்கொழும்பு சிறைக்கலவரத்தில் காயமடைந்த மேலும் 2 சிறை உத்தியோகத்தர்கள் பலி

Date:

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் நேற்று முன்தினம் (13) இரவு உயிரிழந்தனர்.

அதன்படி, நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழந்த சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்து, மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் அம்பலந்தொட்டையைச் சேர்ந்த 35 வயதான சந்திகா லக்ஷன் மற்றும் லூனுகம்வெஹெராவைச் சேர்ந்த 26 வயதான மதுசங்க ரணவீர (மதுசர ரணவீர என்றும் அழைக்கப்படுபவர்) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்திகா லக்ஷனின் ஏழு வயது குழந்தைக்கு இதய நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்றும் சிறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் 21 சிறைக்கைதிகள் உயிரிழந்தனர்.

மோதலில் காயமடைந்த மற்ற சிறைக்கைதிகள் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் நீர்கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ஷம்போ பக்கெட்டுகள்

கடல் மார்க்கமாக இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 5,386 ஷாம்போ பக்கெட்டுகள்...

வீரவன்சவின் சகோதரருக்கு விளக்கமறியல்

ஜனாதிபதி செயலகத்தால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரசாங்க வாகனங்களை...

வெளிநாட்டிலிருந்து வருவோரின் வீடுகளைக் குறிவைத்த திருடர்கள் சிக்கினர்

காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்