மனவைி விவகாரத்து கோரியதனால்  கோபத்தில்  தென்னைகளை வெட்டி வீழ்த்திய கணவன்

Date:

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண்
ஒருவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி நீதி மன்றில் வழக்கு தாக்கல
்செய்து வழக்கு இடம்பெற்று வருகி்ன்ற நிலையில் தனது மனைவியின் மீதுள்ள
கோபத்தால் அவரது வீட்டில் உள்ள தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தியுள்ளார்
கணவன்.

இச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது என மனைவி கிளிநொச்சி
பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இரவு வேளையில்
திருட்டுத்தனமாக காணிக்குள் வந்த கணவன் மரம் வெட்டும் இயந்திரம் மூலம்
தென்னைகளை வெட்டி வீழ்த்தியுள்ளதாக தெரிவிக்கும் மனைவி காய்க்கும்
நிலையில் தனக்கு வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்து வந்த தென்னைகளையே
வெட்டி வீழ்த்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சில தென்னைகளை வெட்டி வீழ்த்தியதோடு மேலும் சில ஒரு தென்னை
வெட்டப்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அதுவும் சற்று பலமான
காற்று வீசும் போது வீழ்ந்துவிடும் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்