மின்னல் தாக்கி 2 விவசாயிகள் பலி

Date:

திங்கட்கிழமை (27) மாலை பெய்த கனமழையைத் தொடர்ந்து விஜயபுரப் பகுதியில் மின்னல் தாக்கியதில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

விஜிதபுரப் பகுதியைச் சேர்ந்த 50 மற்றும் 49 வயதுடைய அந்த இரு ஆண்களும், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று பொலிசார் தெரிவித்தனர்.

கனக்கன்மடுகம மற்றும் புளியங்குளமவில் உள்ள தங்களது நெல் வயல்களில் பாதிக்கப்பட்டவர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியது.

உயிரிழந்தவர்களில் ஒருவரின் உடல் அவரது இல்லத்திலும், மற்றொருவரின் உடல் கலவாவ மருத்துவமனையிலும் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இப்பலோகம பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்