இந்துக்கள் அல்லாதவர்கள் இந்த கோயிலுக்குள் நுழைவதென்றால் பசு சாணம், சிறுநீர் உட்கொள்ள வேண்டும்!

Date:

உத்​த​ராகண்​டில் சார் தாம் யாத்​திரை தொடங்​கி​யுள்ள நிலை​யில், இந்து அல்​லாதவர்​கள் கோயிலுக்​குள் நுழைவதற்கு சில கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டுள்​ளன. கங்​கோத்ரி கோயில் நிர்​வாகக் குழு​வின் தீர்​மானத்​தின் ​படி, இந்து அல்​லாதவர்​கள் ‘பஞ்​சகவ்​யம்’ உட்​கொண்​டால் மட்​டுமே கோயிலுக்​குள் நுழைய அனு​ம​திக்​கப்​படு​வார்​கள்.

அவர்​கள் சனாதன தர்​மத்தை பின்​பற்​றுகிறார்​கள் என்​பதை உறு​திப்​படுத்த, பசு​வின் சிறுநீர் உள்​ளிட்ட பொருட்​கள் கலந்த பஞ்​சகவ்​யத்தை உட்​கொள்​வது கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ள​தாக கங்​கோத்ரி கோயில் நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது. பசு​வின் பால், தயிர், நெய், கோமி​யம் (பசு​வின் சிறுநீர்) மற்​றும் பசு​வின் சாணம் ஆகிய 5 பொருட்​களு​டன் கங்கை நீரும் கலந்த கலவையே பஞ்​சகவ்​யம் ஆகும்.

இதுகுறித்து யமுனோத்ரி கோயில் நிர்​வாக செய்​தித் தொடர்​பாளர் புருஷோத்​தம் உன்​னியல் கூறும்​போது, “நாங்​கள் பல காலங்​களாக பஞ்ச கவ்ய பாரம்​பரி​யத்​தைப் பின்​பற்று​கிறோம். சனாதனத்​தின் மீது ஈடு​பாடு இல்​லாதவர்​களின் வருகை அதி​கரித்து வரு​கிறது. எனவே, சனாதனிகள் மட்​டுமே சன்​ன​தி​யில் தரிசனம் செய்ய இந்த நடவடிக்கை அனு​ம​திக்​கும்​” என்​றார்​.

spot_imgspot_img

More like this
Related

FIFA WC | மெஸ்ஸி, எம்பாப்பே சாதனை கோல்: நொக்-அவுட் சுற்றில் அர்ஜெண்டினா, பிரான்ஸ், நோர்வே

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல் பதிவு செய்த...

ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட 9 மாத சிறைத்தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர்...

வங்கி பாதுகாப்பு ஊழியர்களை கட்டிவைத்து தங்க நகைகள் திருட்டு

இன்று அதிகாலை (ஜூன் 23) மொரகஹஹேனவின் கோரலைம பகுதியில் உள்ள ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்