வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு

Date:

வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
.
அந்தப் பகுதியில் நபர் ஒருவர் சடலமாக கிடப்பது தொடர்பாக இன்று மதியமே வவுனியா பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டிருந்தது. எனினும், தகவல் வழங்கி நீண்ட நேரமாகியும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் அந்தப் பகுதியில் நீண்டகாலமாக யாசகம் பெற்று வந்த ஒரு முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது மரணத்திற்கான காரணம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.

சடலம் அங்கிருந்து அகற்றப்பட்டு, மேலதிக பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்