ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ஹன்சிகா வழக்கு

Date:

தமிழ், தெலுங்​கில் நடித்து வருபவர் ஹன்சிகா மோத்வானி. இவருடைய சகோ​தரர் பிர​சாந்​துக்​கும் சின்னத் திரை நடிகை முஸ்​கன் நான்ஸி ஜேம்ஸ் என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திரு​மணம் நடந்​தது. கருத்​து​வேறுபாடு காரண​மாக இரு​வரும் 2022-ல் பிரிந்தனர்.

இந்​நிலை​யில் மும்பை அம்​போலி போலீஸ் ஸ்டேஷனில் ஹன்​சிகா குடும்​பத்​தின் மீது முஸ்​கன் நான்ஸி குடும்ப வன்​முறை புகார் அளித்​தார். அதில், “ஹன்​சிகா​வும் அவரது தாயார் மோனோ​வும் என் திருமண வாழ்க்​கை​யில் தலை​யிட்டு எனக்​கும் என் கணவருக்​கும் பிரச்​சினையை ஏற்​படுத்​தினர். அவர்​களால் தாக்​குதலுக்கு உள்​ளானேன்.

இதன் காரண​மாக, முகத்​தின் ஒரு பக்க தசைகளில் செயலிழப்பை ஏற்​படுத்​தும் நோயால் பாதிக்​கப்​பட்​டேன்” என்று அவர் குற்​றம் சாட்​டி​யிருந்தார். இதையடுத்து ஹன்சிகா உட்பட 3 பேர் மீதும் வழக்​குப் பதிவு செய்யப்பட்டது. தன் மீதான இப்​பு​காரை ரத்து செய்​யக்​கோரி ஹன்​சிகா மும்பை உயர்​நீ​தி​மன்​றத்தை நாடியிருந்தார்.

இதற்​கிடையே, தொழில​திபர் சோஹைல் கதுரியாவுடனான தனது விவாகரத்​தைக் கடந்த மார்ச் மாதம் ஹன்​சிகா உறுதி செய்​தார். இந்​நிலை​யில் மும்பை திண்​டோஷி செஷன்ஸ் நீதி​மன்​றத்​தில் ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு முஸ்​கன் நான்ஸி மீது ஹன்​சிகா வழக்கு தொடர்ந்​துள்​ளார். அவர் தாக்​கல் செய்​துள்ள மனு​வில், ‘எனது அண்​ணனுக்​கும் நான்​சிக்​கும் திரு​மணம் நடந்​த​போது, நான்​சி​யிடம் ரூ.27 லட்​சம் கடனாகக் கொடுத்​தேன்.

அதைத் திருப்​பித் தராமல் ஏமாற்​று​வதற்​காக, என் மீது பொய்​யான புகார்​களை சமூக வலை​தளங்​களில் நான்சி கூறி வரு​கிறார். என் மீது சுமத்​தப்​பட்ட குற்​றச்​சாட்​டு​கள் அனைத்​தும் ஆதா​ரமற்​றவை. எனக்கு ஏற்​பட்ட மன உளைச்சலுக்​கும் நற்​பெயருக்​குக் களங்​கம் விளைவித்ததற்​கும் அவர் ரூ. 2 கோடி நஷ்டஈடு வழங்க வேண்​டும். பகிரங்​கமாக மன்​னிப்பு கேட்​பதுடன், இனி எனக்கு எதி​ராக எந்த கருத்​தை​யும் பேச தடைவி​திக்​க வேண்​டும்​” என்று கூறப்​பட்​டுள்​ளது.

spot_imgspot_img

More like this
Related

லண்டனில் திலீபன் நினைவேந்தல்: 12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்

12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் முதல் நாள் நிகழ்வு லண்டனில்...

அர்ச்சுனாவின் கூட்டாளிக்கு வந்த சந்தேகம்

எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என்று அரசாங்கம்...

அர்ச்சுனாவின் பைத்தியக்காரத்தனமான உளறலை விசாரிக்கிறது பொலிஸ்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற இலங்கை பொதுஜன பெரமுனவின் கூட்டுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய யாழ்ப்பாண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்