மட்டக்களப்பில் 55 வயது மன்மதராசாவுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Date:

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் ஒன்றுவிட்ட சகோதரியின் மகளான 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 55 வயதுடைய ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே,பிரபாகரன் கடந்த மாதம் 26ம் திகதி தீர்ப்பளித்தார்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமியை கடந்த 2014ம் ஆண்டு யூன் மாதம் 21 ம் திகதி பாலியல் துஷ்பிரயேதகம் செய்த குற்றச்சாட்டில் குறித்த சிறுமியின் மாமா முறையான குறித்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார்

குறித்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில் குறித்த வழக்கு கடந்த பெப்பிரவரி 26 ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது குறித்த நபர் ஆவணங்கள் மற்றும் சாட்சிகள் மூலம் குற்றவாளியாக கண்டறியப்பட்டதையடுத்து அவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டணையும் 25 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

-கனகராசா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு: ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்!

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில்...

00 புதிய பேருந்துகள் ஆண்டு இறுதிக்குள் SLTB-க்கு

ஆண்டு இறுதிக்குள் SLTB-க்கு 600 புதிய பேருந்துகள் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும்...

மட்டக்களப்பில் மெதடிஸ்த திருச்சபையின் 212வது ஆண்டு நிறைவு விழா: 29ஆம் திகதி காந்தி பூங்காவில் விசேட நிகழ்வுகளும் பேரணியும்

இலங்கைக்கு மெதடிஸ்த திருச்சபை வருகை தந்து 212 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்