யாழ்ப்பாணத்திலிருந்து கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்கள் இருவர், ஒரு வாரமாகியும் கரை திரும்பவில்லையென உறவினர்கள் முறையிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், தையிட்டி, ஆவளை பகுதியை சேர்ந்த இருவர், மயிலிட்டி- அன்னை வேளாங்கன்னி துறையிலிருந்து கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி கடற்தொழிலுக்கு சென்றுள்ளனர்.
அவர்கள் இருவரும் இதுவரை கரை திரும்பவில்லையென உறவினர்கள், பொலிஸ் நிலையம், பிரதேச செயலகம், மீன்பிடி திணைக்களம், ஆளுனர் செயலகம், மாவட்ட செயலகம் உள்ளிட்ட பல இடங்களில் முறையிட்டுள்ளனர்.
தங்கராசா அமல்ராஜ் (43), செல்வராசா ராஜ்குமார் (30) ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.



