புகையிரத திணைக்கள வேலைநிறுத்தம் வாபஸ்

Date:

நேற்று நள்ளிரவில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த லோகோமோட்டிவ் இயக்க பொறியாளர்கள் சங்கத்தால் திட்டமிடப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை, 20 இராணுவ வீரர்களுக்கு நடத்தப்படும் லோகோமோட்டிவ் ஓட்டுநர் பயிற்சியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க போக்குவரத்து அமைச்சகம் ஒப்புக்கொண்டதை அடுத்து வாபஸ் பெறப்பட்டது.

ரயில் லொகோமோடிவ் பொறியியலாளர் சங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

ரயில் சாரதி சேவைக்குப் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட சாரதிகளுக்கான குழுவில், இராணுவத்தை சேர்ந்தவர்களுக்கும் ரயில் சாரதிப் பயிற்சி அளிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர்கள் நேற்று நள்ளிரவு முதல் சேவையிலிருந்து விலகத் தீர்மானித்தனர்.

எனினும் அவ்வாறு பயிற்சியில் ஈடுபடவிருந்த 20 இராணுவத்தினரையும் இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் தாம் முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிடுவதாக லொகோமோடிவ் ரயில் சாரதிகள் அறிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஏழைகளை வித்தியாசமாக நடந்த முடியாது: ரூ.225,000 இழப்பீடு வழங்க 3 பொலிசாருக்கு நீதிமன்றம் உத்தரவு!

2023 ஆம் ஆண்டில் ஹன்வெல்ல காவல் நிலையத்தைச் சேர்ந்த மூன்று காவலர்களால்...

கந்தளாயில் நீரில் மூழ்கி மாணவன் பலி

கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதுவெலிய பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த...

தர்மபுரம் விபத்தில் 2 இளைஞர்கள் பலி

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் - முல்லைத்தீவு (A35) வீதியில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்