இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்ட கோட்டா!

Date:

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு நடத்தும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்வரும் 13 ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் பிரதம நீதியரசர் மற்றும் முன்னாள் சட்டமா அதிபர் மோகன் பீரிஸை 16 ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஆணைக்குழு கடந்த 6 ஆம் திகதி கடிதம் ஒன்றை வெளியிட்டது.

கொழும்புக்கு அருகில் அமைந்துள்ள ஒரு வீட்டுத் தொகுதிக்குச் சொந்தமான பல வீடுகளை சட்டவிரோதமாக பல நபர்களுக்கு ஒதுக்கியதை அங்கீகரித்து கடிதங்கள் வழங்கப்பட்டமை தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழு அவருக்கு அழைப்பாணை விடுத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எச். சுபைதா உம்மா பதவிப் பிரமாணம்

அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எச். சுபைதா உம்மா...

சாய்ந்தமருதில் உணவகங்கள், வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் ஆலோசனை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்