சிறுமியை பாழடைந்த இடத்தில் விட்டுச்சென்றவர்கள் கைது!

Date:

கொடூரமாகத் தாக்கப்பட்டு, பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 4 வயது சிறுமியின் சம்பவத்துடன் தொடர்புடைய ஆண் சந்தேகநபர் ஒருவரையும் பெண் சந்தேகநபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று (14) முற்பகல் ஹாலிஎல பகுதியில் வைத்து வத்தேகம பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பெண் சந்தேகநபர், குறித்த சிறுமியின் தாய் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

நேற்று (13) வத்தேகம யடிராவண வீதியிலுள்ள பாழடைந்த பகுதியொன்றில் சிறுமி இருந்த நிலையில், அவசர அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, வத்தேகம பொலிஸ் குழுவினர் சிறுமியை மீட்டு தமது பொறுப்பில் எடுத்தனர்.

முச்சக்கரவண்டியொன்றில் வந்தவர்கள் நேற்று காலை 7.00 மணியளவில் சிறுமியை அந்த இடத்தில் விட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் சந்தேகித்ததுடன், சிறுமியை அழைத்து வர பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி தொடர்பில் CCTV காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

அதற்கமைய, இச்சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேகநபரும் பெண் சந்தேகநபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் செஞ்சோலை படுகொலையின் 20 வருட நினைவேந்தல் தமிழ் தேசிய பேரவை—அனுஷடிப்பு

மட்டக்களப்பில் முல்லைத்தீவு செஞ்சோலை சிறுவர் 61 பேர் படுகொலையின் 20 வருட...

போக்குவரத்து பொலிசார் ஒளிந்து நின்று வாகனங்களை மறிக்கக்கூடாது: கண்டிப்பான உத்தரவு!

போக்குவரத்து விதிமீறலுக்காக ஒரு வாகனத்தை நிறுத்த வேண்டியிருக்கும் போது, ​​காவல்துறை உத்தியோகத்தர்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்