எதிர்வரும் 20/01/2026 அன்று காலை ஒன்பது மணிக்கு யாழ்ப்பாணம் தீவகம் வடக்கு ஊர்காவற்துறை பிரதேசசெயலர் பிரிவில் எழுவைதீவு J/39 கிராம அலுவலர் பிரிவில் காளவாடியடைப்பு என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான 2 பரப்பு காணி சிறீலங்கா கடற்படையின் சுவீகரிப்படவுள்ளது .
அதேபோன்று 21.01.2026 அன்று காலை ஒன்பது மணிக்கு எழுவைதீவு
மூன்றாம் வட்டாரத்தில் பொதுமனுக்கு சொந்தமான 53 பேர்ச்சஸ் அளவுள்ள காணி சிறீலங்கா கடற்படையின் எலரா படையணி முகாம் அமைப்பதற்காக நில அளவைக் காரியாலயத்தினால் சுவீகரிப்படவுள்ளதாக தமிழ்த்தேசிய பேரவையின் சார்பிலான ஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினரும் ஜனநாயக தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி உப செயலாளருமான நிரஞ்சினி ஜெலஸ்ரனிஸ்லாஸ் தெரிவித்துள்ளார் .
சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு இதே காணிகளை கடற்படையினருக்காக அபகரிக்க முயன்றபோது தீவுப் பகுதியை சேர்ந்த தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் எழுவைதீவு மக்களுடன் இணைந்து தடுத்து நிறுத்தியிருந்தனர். ஆகவே இந்த பலாத்கார நடவடிக்கையை தடுத்து நிறுத்துதற்கு அனைவரும் ஒன்றிணைவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.



