டக்ளஸ் சிறைச்சாலை வைத்தியசாலையில்

Date:

நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மஹர சிறைச்சாலை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். மஹர சிறைச்சாலையில் முன்னாள் அமைச்சருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், பார்வையாளர்கள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் (28) மதியம் மஹர சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை முதலில் சிறைச்சாலை மருத்துவர் பரிசோதித்து, பின்னர் சிறைச்சாலை மருத்துவமனையின் ஒரு வார்டில் அனுமதித்தார்.

இராணுவ துணைப்படையாக செயற்பட்ட காலத்தில், அவருக்கு இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கி பாதாள உலகக் கும்பல் உறுப்பினரிடமிருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜனவரி 09 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக தேர்தலில் யாரும் எதிர்பாராத திருப்பம்.. தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவு… த.வெ.க முன்னிலையில்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர், துணை முதல்வர் உட்பட திமுக அமைச்சர்கள்...

முல்லைத்தீவில் இரு மீனவர்கள் மாயம்

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல்...

யாழில் பியர் போத்தலால் தாக்கப்பட்டவர் பலி

யாழ்ப்பாணத்தில் பியர் போத்தலால் தாக்கப்பட்டதில் 36 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டதாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்