நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மஹர சிறைச்சாலை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். மஹர சிறைச்சாலையில் முன்னாள் அமைச்சருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், பார்வையாளர்கள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம் (28) மதியம் மஹர சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை முதலில் சிறைச்சாலை மருத்துவர் பரிசோதித்து, பின்னர் சிறைச்சாலை மருத்துவமனையின் ஒரு வார்டில் அனுமதித்தார்.
இராணுவ துணைப்படையாக செயற்பட்ட காலத்தில், அவருக்கு இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கி பாதாள உலகக் கும்பல் உறுப்பினரிடமிருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜனவரி 09 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.



