தமிழரசுக் கட்சியினால் மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு அனுப்பப்பட்ட அறிக்கை .

Date:

இலங்கை தமிழரசுக் கட்சியினால் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் உறுப்பு நாடுகளின் தூதரகத் தலைவர்களுக்கு அறிக்கை ஒன்றை முன்வைத்தனர். 

இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் தொடர்பாக செப்டம்பர் 2024 இல் 57 வது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 57/1 தீர்மானத்தின் காலம் செப்டம்பர் 2025 இல் 60 ஆவது அமர்வோடு முடிவடையவுள்ள நிலையில் இலங்கை தமிழரசு கட்சி ஜ.நா.மனிதஉரிமை ஆணையகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

குறித்த கடிதத்தில் போர்குற்றங்கள் தொடர்பான வழமையான கோரிக்கைகள் மற்றும் அண்மைய காலத்து செம்மணி விவகாரம் மற்றும் சமஸ்டி போன்ற விடயங்களை வலியுறுத்தியும் குறித்த காலக்கேடு முடிவடையவுள்ள நிலையில் எமக்கான உரிமைகைளை வலியுறுத்தியும் குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இக் கடிதத்தை கட்சியின் சி.வி.கே. சிவஞானம் தலைவர் அவைத் தலைவர் வடமாகாண சபை ,
எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதி சட்டத்தரணி ,பொதுச் செயலாளர் எஸ். ஸ்ரீதரன் (எம்.பி.) பாராளுமன்ற குழு தலைவர் ஜி. ஸ்ரீநேசன் (எம்.பி.) கே.கோடீஸ்வரன் (எம்.பி.) சாணக்கியன் ராசமாணிக்கம் (எம்.பி.) கே.எஸ். குகதாசன் (எம்.பி) து. ரவிகரன் (எம்.பி.) ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

ஈரானுடனான ஒப்பந்தம் நெருங்கி விட்டது!

அமெரிக்காவும் ஈரானும் இன்னும் இறுதிக் கட்டத்தை எட்டவில்லை, ஆனால் தங்கள் மோதலைத்...

டெங்கு உயர் ஆபத்து மாவட்டமாக கொழும்பு அறிவிப்பு; ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை

டெங்கு அபாயம் அதிகரிப்பு: கொழும்பில் ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை கொழும்பு...

அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகுமா? உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு

ஜெனீவாவில் முக்கிய சந்திப்பு; ஹோர்முஸ் நீரிணை திறப்பு, பொருளாதார தடைகள் நீக்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்