தெஹிவளையில் தெரு விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒன்பது பெண்கள் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
26 முதல் 51 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் ரத்மலானை, மஹரகம, தெஹிவளை மற்றும் மொரட்டுவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
நேற்று இரவு (10) தெஹிவளை பகுதியில் கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தெஹிவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.




