24.8 C
Jaffna
March 30, 2025
Pagetamil
இலங்கை

வீட்டுச்சாப்பாடு கேட்கும் தென்னக்கோன்!

சிறைச்சாலை தடுப்புக் காவலில் இருக்கும் போது, ​​வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் உணவை அனுமதிக்குமாறு பணி நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் விடுத்த கோரிக்கையை சிறைச்சாலைகள் திணைக்களம் பரிசீலித்து வருவதாகக் கூறுகிறது.

தேசபந்து தென்னகோன் தனது உணவை வீட்டிலிருந்து கொண்டு வர அனுமதி கோரியுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையர் காமினி பி. திசாநாயக்க தெரிவித்தார்.

அதன்படி, சம்பந்தப்பட்ட கோரிக்கைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களை சமர்ப்பிக்குமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த உண்மைகளைக் கருத்தில் கொண்டு, திரு. தேசபந்து தென்னகோன் சிறையில் இருக்கும் போது அவருக்கு வீட்டிலிருந்து உணவு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று  தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஆனையிறவு உப்பளம் மீள ஆரம்பம்: ஆனால் பெயர் வேறு!

Pagetamil

நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் பங்குபற்றாமல் நடைபெற்ற உடுவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

Pagetamil

விரைவில் ஆனையிறவு உப்பு!

Pagetamil

அப்பக்கோப்பை!

Pagetamil

வதை முகாம்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெறும்; வவுனியாவில் அமைச்சர் பிமல்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!