கொட்டாஞ்சேனை கொலை: ஒருவர் தடுத்து வைப்பு!

Date:

கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையமொன்றில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை செய்து வருவதாக பொலிஸார் இன்று (24) கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக கொட்டஹேன பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கொழும்பு 15, மெத்சந்த செவன வீட்டுத் தொகுதியைச் சேர்ந்த பசிந்து விராஜ், கொழும்பு கூடுதல் நீதவான் பவித்ரா சஞ்சீவனி பதிராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, பொலிசார் இதனை தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்களுக்கு துப்பாக்கிகளை வழங்கியவர் இந்த சந்தேக நபர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திராஜா, விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி அமைதிப் போராட்டம்

செம்மணி–சித்துப்பாத்தி மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி...

இனப்படுகொலை வரலாற்றுத் தடயங்களை நாமே அழித்துவிட்டு இளையோரை வரலாறு தெரியாதவர்கள் என்று விமர்சிப்பது பெரும் அபத்தம் பொ. ஐங்கரநேசன் காட்டம்!

“இளைய தலைமுறை தமிழ்த்தேசிய அரசியலுடன் இல்லை அவர்களுக்கு எமது போராட்டத்தின் வரலாறும், நாம்...

MSC Elsa 3 கப்பல் விபத்து: கடலில் சிந்திய பிளாஸ்டிக் துகள்களில் 43-க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் சேகரிப்பு

கேரளக் கடற்கரைக்கு அருகே மூழ்கிய MSC Elsa 3 கப்பலிலிருந்து கடலில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்