முன்னாள் காதலி வேறொருவருடன் நடனமாடியதை பார்த்த இளைஞன் தற்கொலை

Date:

தன்னை விட்டுப் பிரிந்த காதலி இசை நிகழ்ச்சியில் வேறொருவருடன் நடனமாடுவதை கண்ட இளைஞன் மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் மொனராகலையில் இடம்பெற்றுள்ளது.

மொனராகலை, ஹுலந்தாவ தெற்கைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒரு இளம் பெண்ணுடன் காதல் உறவில் இருந்துள்ளார். எனினும், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, இருவருக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காதலி உறவை முறித்துக்கொண்டுள்ளார்.

காதல் உறவை மீண்டும் தொடர இளைஞன் முயன்றிருந்தபோதிலும், காதலி அதற்கு உடன்படாமலிருந்துள்ளார். இதற்கிடையில், சனிக்கிழமை (22) மொனராகலை பிரதேச சபை மைதானத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சிக்கு சென்ற இளைஞன், அங்கு தனது முன்னாள் காதலி வேறொரு இளைஞனுடன் நடனமாடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த அவர் நிகழ்ச்சியிலிருந்து வீட்டிற்கு திரும்பிய பின்னர், தனி அறையில் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்த இளைஞரின் பிரேத பரிசோதனை மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் மேற்கொள்ளப்படவுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘கணினிப் பிழை’ காரணமாக ஒப்பந்ததாரர்களுக்கு ரூ. 263 மில்லியன் தவறுதலாக அனுப்பப்பட்டதை இலங்கை வங்கி உறுதி செய்துள்ளது: நாமல்

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கொடுப்பனவுகள் இரட்டிப்பாக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை...

பிறந்தநாள் நிகழ்வில் முகத்தில் கேக் பூசிய தகராற்றில் 3 பேர் சுட்டுக்கொலை

உத்தர பிரதேசத்​தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, முகத்​தில் கேக் பூசுவது...

7 எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்த தாக்கம்: ஆம் ஆத்மியில் இருந்து எம்.பி., எம்எல்ஏ.க்கள் விலகும் அபாயம்

ஆம் ஆத்மி கட்​சி​யின் மக்​களவை உறுப்பினர்களுடன் பஞ்​சாபின் ஆளும் கட்சி எம்​எல்​-ஏக்​களும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்