மனைவியின் கடன் சுமையால் கணவன் துயர முடிவு

Date:

மனைவியின் கடன் சுமையால் மனமுடைந்த கணவன் உயிரை மாய்த்த துயர சம்பவம் பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலிப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து தகவல் பெற்ற உறவினர்கள் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, பொலிஸார் அங்கு சென்று சம்பந்தப்பட்ட நபரின் சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். உடற்கூற்று பரிசோதனைகள் முடிந்ததை தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் நவாலி வடக்கு பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய குடும்பஸ்தர் எனவும், அவருடைய மனைவி அதிகளவில் கடன் பெற்றதால் மன அழுத்தத்திற்கு உள்ளாகியதால் உயிரை மாய்த்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த துயர சம்பவம் தொடர்பாக திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, சம்பந்தப்பட்ட எல்லா கோணங்களிலும் விசாரணைகள் தொடர்ந்துவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பெண்ணின் தலைமுடியை வெட்டியவர்களுக்கு விளக்கமறியல்

இணையத்தில் பரப்பப்பட்ட ஒரு காணொளிக் காட்சியின்படி, பொருட்கள் திருட்டு தொடர்பாக பல்பொருள்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 7வது ஆண்டு நினைவு!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் 7வது ஆண்டு நினைவு தினம் இன்று...

பேச்சுக்காக பாகிஸ்தான் புறப்பட்ட அமெரிக்க துணை ஜனாதிபதி

துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் அமெரிக்க தூதுக்குழுவினர், ஈரான் குறித்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்