மனைவியின் கடன் சுமையால் கணவன் துயர முடிவு

Date:

மனைவியின் கடன் சுமையால் மனமுடைந்த கணவன் உயிரை மாய்த்த துயர சம்பவம் பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலிப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து தகவல் பெற்ற உறவினர்கள் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, பொலிஸார் அங்கு சென்று சம்பந்தப்பட்ட நபரின் சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். உடற்கூற்று பரிசோதனைகள் முடிந்ததை தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் நவாலி வடக்கு பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய குடும்பஸ்தர் எனவும், அவருடைய மனைவி அதிகளவில் கடன் பெற்றதால் மன அழுத்தத்திற்கு உள்ளாகியதால் உயிரை மாய்த்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த துயர சம்பவம் தொடர்பாக திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, சம்பந்தப்பட்ட எல்லா கோணங்களிலும் விசாரணைகள் தொடர்ந்துவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை நிறைவு

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று நாட்டின் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும்...

வெப்பமான வானிலை குறித்து ‘அம்பர்’ எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை பிரிவினால் வெப்பமான வானிலை...

35 வருட வெள்ளைப் பணிக்கு ஓய்வு!

அன்பும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒரு நீண்டகால வைத்தியசாலைப் பணியை வெற்றிகரமாக நிறைவு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்