இலங்கை அரசாங்கத்தால் இன்றையதினம் தடை செய்யப்பட்ட அமைப்புகள்

Date:

தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 15 பயங்கரவாத அமைப்புகள் தடைசெய்யப்பட்டுள்ளதாக அதிவிசேட வர்த்தமானி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் அனைத்து நிதி சொத்துகள் மற்றும் பொருளாதார வளங்கள் முடக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய 222 நபர்களின் பட்டியலும் இந்த அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட அமைப்புகளில் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழர் புனர்வாழ்வு அமைப்பு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, உலக தமிழர் இயக்கம், நாடு கடந்த தமிழீழ அரசு, உலக தமிழர் நிவாரண நிதியம், தலைமையகக் குழு உள்ளிட்ட பல அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன், தேசிய தௌஹீத் ஜமாஅத், ஜமாதே மிலாதே ஈப்ராஹிம், விலாயத் அஸ் செய்லானி, கனேடிய தமிழர் தேசிய அவை, தமிழ் இளைஞர் அமைப்பு, டருல் ஆதர் அத்தபவியா, இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம், சேவ் த பேர்ள்ஸ் போன்ற அமைப்புகளும் இந்தத் தடையின் கீழ் அடக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மேலும் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

spot_imgspot_img

More like this
Related

00 புதிய பேருந்துகள் ஆண்டு இறுதிக்குள் SLTB-க்கு

ஆண்டு இறுதிக்குள் SLTB-க்கு 600 புதிய பேருந்துகள் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும்...

மட்டக்களப்பில் மெதடிஸ்த திருச்சபையின் 212வது ஆண்டு நிறைவு விழா: 29ஆம் திகதி காந்தி பூங்காவில் விசேட நிகழ்வுகளும் பேரணியும்

இலங்கைக்கு மெதடிஸ்த திருச்சபை வருகை தந்து 212 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு,...

நீதித்துறை நியமன தாமதம்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கண்டனப் பிரேரணையில் கையெழுத்து

நீதித்துறையின் மூத்த அதிகாரிகளை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விசேட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்