ரயில் மோதி முதியவர் பலி

Date:

ரயிலில் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கொழும்பிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரயில், தம்புத்தேகம மற்றும் செனரத்கம ரயில் நிலையங்களுக்கு இடையில் சென்றுக்கொண்டிருந்த போது, ரயில் மோதி சுமார் 65 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்துள்ளார்.

இன்று (19) அதிகாலை இடம்பெற்ற இவ் விபத்தில், மோதி பலத்த காயமடைந்த அந்த நபர், உடனடியாக தம்புத்தேகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார்.

எனினும், அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபரின் முழு விபரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதுகுறித்த மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

குறுகிய இனவாத, மதவாத சிந்தனைகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாகும் – ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி

குறுகிய இனவாத மற்றும் மதவாத சிந்தனைகள் நாட்டை மீண்டும் அழிவுப் பாதைக்கு...

சிறுமியை பாழடைந்த இடத்தில் விட்டுச்சென்றவர்கள் கைது!

கொடூரமாகத் தாக்கப்பட்டு, பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 4 வயது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்