30 மில்லியன் பெறுமதியான கையடக்க தொலைபேசிகள் கட்டுநாயக்காவில் கைப்பற்றல்

Date:

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், 30 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கையடக்க தொலைபேசிகள் மற்றும் டெப்லெட் கணினிகளை சட்டவிரோதமாக கொண்டுவர முயன்ற வர்த்தகர் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 13, கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் அடிக்கடி வெளிநாடு சென்று வரும்பவர் என குறிப்பிடப்படுகிறது.

கடந்த பெப்ரவரி 1ம் திகதி மாலை 4.30 மணிக்கு கட்டார் ஏர்வேஸ் விமானம் QR-654 மூலம் இலங்கைக்கு வந்த அவர், தனது பொருட்களை அதே விமானத்தில் கொண்டு வரவில்லை. பின்னர், தனி விமானம் மூலம் பொருட்கள் சுங்க திணைக்களத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், நேற்று அவற்றைப் பெற்றுக்கொள்ள குறித்த நபர் சென்றபோது அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இச் சோதனையின் போது, அவரது பொருட்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 180 உயர் தர கையடக்க தொலைபேசிகள் மற்றும் 5 டெப்லெட் கணினிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து, சுங்க அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டு, இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதால், குறித்த வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

நடு வீதியில் வாளுடன் அட்டகாசம் செய்த 3 பேருக்கு விளக்கமறியல்

திவுலபிட்டிய நகரில் பேருந்து ஓட்டுநர் மீது வாளால் தாக்குதல் நடத்த முயன்ற...

நீதிபதிகள் ஓய்வு வயது சர்ச்சை: ஜனாதிபதி- சட்டத்தரணிகள் சந்திப்பு சர்ச்சை!

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான முன்மொழியப்பட்ட...

இந்தியாவின் 80வது சுதந்திரதினம்

இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம் சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்