இலங்கையின் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம் குறித்து ஐநா கேள்வி

Date:

ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கு எதிரான பாகுபாடு ஒழிப்புக் குழு தனது 9வது அறிக்கையை நேற்று (14) பரிசீலித்து நிறைவு செய்துள்ளது.

முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் தொடர்பான கேள்விகள்
இதன் போது, மகளிர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தலைமையிலான இலங்கைத் தூதுவுக்குழுவும் ஐநா பிரதிநிதிகளும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய செயல் திட்டத்துக்கு குழுவின் பாராட்டு கிடைத்ததோடு, குழந்தை திருமணம் மற்றும் உள்ளக வன்முறை அனுமதிக்கப்பட்ட முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் 2022ம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்டபோதிலும், சில குறைகள் நீடிக்கின்றன. குழந்தை திருமணத்தைக் கட்டுப்படுத்துவதற்கான மேலதிக திருத்தங்கள் உள்ளதா என ஐநாவின் அறிக்கையாளர் யமிலா கொன்சாலஸ் பெரர் கேட்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சரோஜா போல்ராஜ், பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளை பாதுகாத்து பாலின சமத்துவத்தை மேம்படுத்த இலங்கை அரசு உறுதிபூண்டுள்ளதாக கூறினார். 2024ம் ஆண்டு ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு, சர்வதேச மனித உரிமைகள் ஒப்பந்த அமைப்புடன் நாட்டின் முதல் ஈடுபாடு இதுவாகும் என்பதால், இந்த மதிப்பீடு மிக முக்கியமானது.

முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்ட திருத்தம் குறித்து அரசாங்கம் ஆலோசனை நடத்தி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளுக்கும் கலாச்சார உரிமைகளுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்த முயற்சிக்கின்றது.

திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை நிர்ணயிப்பது மற்றும் இந்த விவகாரத்திற்கான பல்துறைக் குழுவை அமைப்பது குறித்து மகளிர் நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது. குடும்ப வன்முறையைத் தடுக்க, அதன் தடுப்புச் சட்டம் திருத்தப்பட்டு இந்த ஆண்டு அமுலுக்கு வரும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட, மருத்துவ, உளவியல் உதவிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சரின் குழு தெரிவித்துள்ளது. மேலும், வீடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக இலவச முறைப்பாட்டு தொலைபேசி இலக்கம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த விவகாரங்களில் பல்வேறு முக்கியமான பேச்சுவார்த்தைகள் ஐநா குழுவுக்கும் இலங்கை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்றுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

சாய்ந்தமருதில் உணவகங்கள், வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் ஆலோசனை...

குறுகிய இனவாத, மதவாத சிந்தனைகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாகும் – ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி

குறுகிய இனவாத மற்றும் மதவாத சிந்தனைகள் நாட்டை மீண்டும் அழிவுப் பாதைக்கு...

சிறுமியை பாழடைந்த இடத்தில் விட்டுச்சென்றவர்கள் கைது!

கொடூரமாகத் தாக்கப்பட்டு, பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 4 வயது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்