பல்லாயிரக்கணக்கான ஆமைக் குஞ்சுகளை ஆற்றில் விட்ட பிரேசில்

Date:

[embedyt] https://www.youtube.com/watch?v=os8vo78BeO8[/embedyt]

தென் அமெரிக்காவின் மிகப்பெரிய நாடான பிரேசிலில், அருகிவரும் உயிரினமாக உள்ள டிராஜாகாஸ் (Yellow-Spotted River Turtles) ஆமைகளை பாதுகாக்கும் முயற்சியாக, பல்லாயிரக்கணக்கான ஆமைக் குஞ்சுகள் இயற்கை சூழலில் விடப்பட்டுள்ளன.

இவ்வகை ஆமைகள் பெரும்பாலும் ஆறுகளின் கரைகளிலும், காடுகளின் நீர்நிலைகளிலும் இனப்பெருக்கம் செய்யும் தன்மை கொண்டவை. அவை கடற்கரையில் அல்லது ஆற்றங்கரையில் முட்டையிடும் போது, பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளால் அவை அழிக்கப்படுகின்றன. இதன் காரணமாக, இந்த உயிரினத்தின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை தடுக்கும்முகமாக, பிரேசிலின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், இகாபோ ஆசு ஆற்றங்கரையில் 5,000 டிராஜாகாஸ் ஆமை குஞ்சுகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, வனத்துறை அதிகாரிகளால் அவை ஆற்றில் விட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இச்செயலுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றன. பொருத்தமான சூழலில் இந்த ஆமைகள் வளர்ந்து, இனப்பெருக்கம் செய்யும் வாய்ப்பை வழங்கியுள்ள இந்த நடவடிக்கை, இந்த ஆமைகளின் இன அழிவை தவிர்க்க ஒரு முக்கியமான முயற்சியாக பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

லண்டனில் திலீபன் நினைவேந்தல்: 12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்

12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் முதல் நாள் நிகழ்வு லண்டனில்...

அர்ச்சுனாவின் கூட்டாளிக்கு வந்த சந்தேகம்

எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என்று அரசாங்கம்...

அர்ச்சுனாவின் பைத்தியக்காரத்தனமான உளறலை விசாரிக்கிறது பொலிஸ்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற இலங்கை பொதுஜன பெரமுனவின் கூட்டுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய யாழ்ப்பாண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்