தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு சிறீலங்கா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு கவனயீர்ப்புப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (பெப்.11) பி.ப 4.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
இப்போராட்டம் நாளை பௌர்ணமி தினமாகிய புதன்கிழமை மாலை 6.00 மணி வரை தொடரும்.
இப்போராட்டத்திற்கு பல கட்சிகளும் பேதங்களின்றி ஆதரவு வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். எனவே அனைத்து தமிழ் மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் சார்ந்தவர்களை
இப்போராட்த்திற்கு கட்சி பேதங்களின்றி அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தையிட்டி மக்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.




