மாவையின் மறைவுக்கு ஹிஸ்புல்லாஹ் இரங்கல்

Date:

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும், தமிழ் மக்களுக்காக தன் வாழ்நாட்களை போராட்டங்களோடு ,சிறைவாசங்களோடும் கடந்து பெரும் பங்காற்றிய சரித்திர நாயகன் மாவை சேனாதிராசா அவர்களின் மறைவு மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

தமிழ் அரசியல் தலைவர் மாவை சேனாதிராசாவின் மறைவையிட்டு வெளியிட்ட அனுதாப செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மறைந்த தலைவர் மாவை சேனாதிராசா அவர்கள் என்னோடு பாராளுமன்றத்தின் இருந்த ஒருவர். அவரை பற்றி நான் நன்றாக அறிந்தவன் தமிழ் மக்கள் அரசியல் ரீதியான பிரச்சினைகளை எதிர் நோக்குகின்ற பல்வேறு சந்தர்ப்பங்களில் தைரியமாக குரல் கொடுத்தவர் என்பதுடன் மிகவும் நீதியாகவும் நியாயமாகவும் நடந்துகொள்கின்றனர் என்பதுடன், தான் எப்போதும் மதிக்கும் தலைவர்களில் ஒருவர் என்றும் என்றும் தெரிவித்தார்.

நீண்ட காலமாக தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்த இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராசா ஐயாவின் மறைவு தமிழர் வரலாற்றில் நிரப்ப முடியாத வெற்றிடமாக இருக்கும் என்றும் அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் எனவும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்