திருகோணமலையில் தேர்தல் செலவறிக்கை சமர்ப்பிக்காதவர்களுக்கு வழக்கு

Date:

கடந்த ஆண்டு (2024) பொதுத் தேர்தலில் போட்டியிட்ட பலர் தமது செலவறிக்கையை குறித்த நேரத்திற்குள் சமர்ப்பிக்காத காரணத்தால், திருகோணமலை குற்றப்புலனாய்வு பணியகம் அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

இவ்வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (28) திருகோணமலை நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட்ட 17 அபேட்சகர்கள் மற்றும் கட்சி செயாலாளர்கள், சுயேட்சைக் குழு தலைவர்கள் உட்பட 9 பேருக்கு எதிராக இது தொடரப்பட்டுள்ளது.

திருகோணமலை குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் பிரதம பொலிஸ் பரிசோதகர் எம். எஸ். நஜீம் தலைமையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்