மட்டக்களப்பில் மின்சாரத் தூணுடன் மோதிய வேக வேன்

Date:

மட்டக்களப்பில் மின்சாரத் தூணில் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவில் உள்ள பிள்ளையாரடி சர்வோதய வீதியில் நேற்று இரவு 8.00 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றது. வேகமாக வந்த வேன், வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியிலிருந்து விலகி மின்சாரத் தூணுடன் மோதியதில் மின்சார தூண் உடைந்து வீழ்ந்தது.

இந்த விபத்தில் வேனுக்கு பலத்த சேதம் ஏற்பட்டதுடன், மின்சாரத் தூண் சேதமடைந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் மின்சார தடை ஏற்பட்டது. சம்பவத்துக்கு பின்னர் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், இந்த விபத்து குறித்து கொக்குவில் போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு: ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்!

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில்...

00 புதிய பேருந்துகள் ஆண்டு இறுதிக்குள் SLTB-க்கு

ஆண்டு இறுதிக்குள் SLTB-க்கு 600 புதிய பேருந்துகள் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும்...

மட்டக்களப்பில் மெதடிஸ்த திருச்சபையின் 212வது ஆண்டு நிறைவு விழா: 29ஆம் திகதி காந்தி பூங்காவில் விசேட நிகழ்வுகளும் பேரணியும்

இலங்கைக்கு மெதடிஸ்த திருச்சபை வருகை தந்து 212 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்