ஒரே நாளில் 33 தமிழக மீனவர்கள் கைது

Date:

எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வரத்தை சேர்ந்த 18 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே நேற்று நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கே கடற்படை கப்பலில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், மேற்கண்ட மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 2 விசைப்படகுகளில் சென்றிருந்த 18 மீனவர்களை சிறைபிடித்துள்ளனர்.

இந் நிலையில், இன்று (26) அதிகாலை மேலும் ஒரு விசைப்படகையும் அதிலிருந்த 15 மீனவர்களையும் சிறைபிடித்துள்ளனர். இலங்கை கடற்படையால் ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 33 பேர் சிறைபிடித்துச் செல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்

மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார். கொல்​கத்​தா​வின் பிரி​கேட்...

‘விஜய் ஆட்சி அமைத்தால் தமிழகத்துக்கே பேரழிவு’ – டிடிவி தினகரன் காட்டம்

“முதல்வராகி ஊழலை ஒழிப்போம் என்று சொல்பவர்கள், முதல்வராகவே ஃபோர்ஜரி செய்கிறார்கள். ஒரு...

யாழ் போதனா வைத்தியசாலையில் தீ

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (09) அதிகாலை வேளையில் தீ பரவல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்