ஜனாதிபதி நிதியத்தின் புதிய திட்டம்

Date:

மக்களுக்கு பயனுள்ளதாகவும் விரைவான சேவையை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டத்தில் கொண்டு செல்லும் வேலைத்திட்டம், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் எதிர்வரும் 7ம் திகதி அலரி மாளிகையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி, இதுவரை கொழும்பில் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி நிதிய அலுவலகத்தின் சேவைகள், நாடளாவிய ரீதியில் உள்ள 361 பிரதேச செயலக அலுவலகங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஐந்து பிரதேச செயலகங்களில் முன்னோடித் திட்டமாக இது ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், புதிய டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வலையமைப்பு வேலைத்திட்டத்தின் ஊடாக மக்களுக்கு மிகவும் பயனுள்ள மற்றும் வினைத்திறனான சேவைகளை வழங்கும்வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரொஷான் கமகே தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ், நோய்க்கு அமைவான நிதிக்கான விண்ணப்பங்கள் பிரதேச செயலகங்களின் ஊடாக மேற்கொள்ள முடியும். மேலும், தேவையான ஆவணங்களை உடனடியாக பிரதேச செயலகங்களில் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் 7ம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் செயல்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டம், மக்களின் தேவைகளுக்கு நேரடியாக உத்தரவாதம் அளிக்கும் வகையில், ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

முச்சக்கர வண்டியின் மீது மரம் விழுந்து 3 பேர் பலி

நாவலப்பிட்டியிலிருந்து மப்பகந்த பகுதிக்குச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது யூக்கலிப்டஸ்...

இலங்கை முழுவதும் முறையான பதிவுகளின்றி 300 முதியோர் இல்லங்கள் இயங்குகின்றன!

நாட்டில் 300க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் இருப்பது உறுதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்