28.4 C
Jaffna
March 9, 2025
Pagetamil
இலங்கை

யாழில் நிமோனியா காய்ச்சலால் 4 வயது சிறுமி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 06ம் வட்டாரத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி, நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி, முதலில் கொக்குவில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், காய்ச்சல் குணமாகாமல் நிலைமை மேலும் மோசமடைந்ததால், கடந்த திங்கட்கிழமை (20) சிறுமி புங்குடுதீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

வைத்தியர்கள் சிறுமியை பரிசோதித்தபோது, அதற்கும் முன்பே அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

உடற்கூற்று பரிசோதனை மூலம், சிறுமி நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் புங்குடுதீவு மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இழப்பாகவே விளங்குகின்றது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தேசபந்து கைது செய்யப்படாமலிருப்பதன் பின்னணியில் அநுர அரசின் டீல்!

Pagetamil

சண்டித்தனத்தில் ஈடுபட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் கைது!

Pagetamil

பாராளுமன்றத்திலிருந்து விலகி பெண்ணுக்கு வழிவிடப் போகிறேன்!

Pagetamil

அடுத்தடுத்து அம்பலமாகும் மோசடி விவகாரங்களில் தலைமறைவாகும் மஹிந்தவின் சகாக்கள்!

Pagetamil

கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் காரில் நசுங்கி பலி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!