வில்பத்து தேசிய பூங்காவிற்கு செல்ல தடை

Date:

அண்மையில் பெய்த கனமழையினால் கலா ஓயா நிரம்பி வழிந்ததில், வில்பத்து தேசிய பூங்காவின் எளுவன்குளம் நுழைவு வாயில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குப் புறக்கணிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை, இந்த பூங்காவிற்கு செல்ல முடியாது என வனவிலங்கு பிரிவு அறிவித்துள்ளது.

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் மூலம், கலா ஓயா வழியாக சுமார் 6,000 கன அடி நீர் பாய்ந்ததன் காரணமாக, எளுவன்குளம்-கலா ஓயா பாலம் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியதன் மூலம் அந்த பகுதி முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகிறது.

இதனால் பூங்காவிற்கு செல்லும் வழி பாதுகாப்பற்றதாக மாறியுள்ளது.

இதேவேளை, சுற்றுலாப் பயணிகளுக்கான புது அறிவிப்பின்படி, எந்த விதமான உள்நாட்டு அல்லது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பூங்காவிற்கு வர முடியாது என வனவிலங்கு பிரிவு தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நடு வீதியில் வாளுடன் அட்டகாசம் செய்த 3 பேருக்கு விளக்கமறியல்

திவுலபிட்டிய நகரில் பேருந்து ஓட்டுநர் மீது வாளால் தாக்குதல் நடத்த முயன்ற...

நீதிபதிகள் ஓய்வு வயது சர்ச்சை: ஜனாதிபதி- சட்டத்தரணிகள் சந்திப்பு சர்ச்சை!

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான முன்மொழியப்பட்ட...

இந்தியாவின் 80வது சுதந்திரதினம்

இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம் சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்