குடிபோதையில் மணமகனின் மோசமான செயல்

Date:

இந்தியாவில் பெங்களூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் குடிபோதையில் மணமகன் செய்த செயல் இப்போது இணையத்தை உலுக்கி வருகிறது. அனைத்து ஏற்பாடுகளையும் சரியாக செய்து மகளின் வாழ்க்கையில் முக்கிய தருணத்தை கொண்டாட தயாராக இருந்த மணமகளின் தாய், மாமியாராக மாறும் முன்பே அதிர்ச்சி அடைந்தார்!

மணமகன் தனது நண்பர்களுடன் குடித்து போதையில் திருமண மேடைக்கு வந்து ரகளையில் ஈடுபட்டதோடு, விருந்தினர்களிடமும் தகாத முறையில் நடந்து கொண்டார். இதைக் கண்டதும், அதிர்ச்சியடைந்த மணமகளின் தாய் “இந்த திருமணமே வேண்டாம்” என அறிவித்ததுடன், கையெடுத்து கும்பிட்டு, விருந்தினர்களிடமும் “அனைவரும் வீட்டுக்கு செல்லுங்கள்” என கேட்டுக்கொண்டார்.

மேலும், குறித்த மணமகன் ஆரத்தி தட்டை தூக்கி வீசியது, வருங்காலத்தில் மகளின் வாழ்க்கை பாதிக்கப்படும் என கவலைப்பட்ட தாயின் முடிவை துரிதப்படுத்தியது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, மணமகளின் தாயின் முடிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்