18ஆம் திகதி முதல் வடக்கு, கிழக்கில் கன மழைக்கு வாய்ப்பு

Date:

எதிர்வரும் 18ஆம் திகதி முதல் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கன மழை பெய்யலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அவரது பதிவு வருமாறு-

15.01.2024 புதன்கிழமை மாலை 5.30 மணி

இந்த பதிவு மக்களை குழப்பத்துக்குள்ளாக்கும் பதிவல்ல. ஆனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் பதிவு. நாம் போதுமான தயார்ப்படுத்தலுடன் இருந்தால் ஏற்படக்கூடிய சிறிய பாதிப்பைக்கூட தவிர்க்க முடியும் என்பதனாலேயே இப் பதிவு.

முன்னரே குறிப்பிட்டபடி எதிர்வரும் 17.01.2025 அன்று வங்காள விரிகுடாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக்குகின்றது.

இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியுடன் மேலைக் குழப்பமும், மேடன் யூலியன் அலைவின் வருகையும் இருப்பதனால் எதிர்வரும் 18.01.2025 முதல் 21.01.2025 வரை மிகக் கனமழை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

1. எதிர்வரும் 18.01.2025 முதல் 21.01.2025 வரை மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
2. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நிலம் நிரம்பு நிலையை அடைந்துள்ளது.
3. கிழக்கு மாகாணங்களின் முக்கிய குளங்களான சேனாநாயக்க சமுத்திரம், உன்னிச்சை , கந்தளாய்,வாகனேரி, கடுக்காமுனை, நவகிரி, வீராகொட, றுகம் குளம் போன்றன கிட்டத்தட்ட அவற்றின் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.
4. வடக்கு மாகாணத்தின் பிரதான குளங்களான இரணைமடு, வவுனிக்குளம், முத்தையன் கட்டு, கணுக்கேணி, தண்ணிமுறிப்பு போன்றன தற்போது மேலதிக நீரை வெளியேற்றுகின்றன.
4. இந்த சூழ்நிலையில் எதிர்வரும் 18.01.2025 முதல் 21.01.2025 வரை கிடைக்கும் கன மழை பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தாழ்வான பகுதிகளிலும், குளங்களின் மேலதிக நீர் வெளியேறும் பகுதிகளுக்கு அண்மையில் உள்ள மக்களும் இந்நாட்களில் மிக அவதானமாக இருப்பது அவசியம்.
6. முன்னரே குறிப்பிட்டபடி நாளையும் நாளை மறுதினமும் (16/17) மழை சற்று குறைவாக இருக்கும்
7. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் விவசாயிகள் இதனைக் கருத்தில் கொண்டு தமது அறுவடைச் செயற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வவுனியா விபத்தில் ஒருவர் பலி

வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் நேற்று (9) இரவு இடம்பெற்ற கோர விபத்தில்...

தமிழ் தேசிய கட்சிகளின் சந்திப்பில் சூம் வழியாக கலந்து கொண்ட தமிழ் தேசிய பேரவைக்கு எதிர்ப்பு!

தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் தேசிய கட்சிகளுக்கு இடையிலான கலந்துரையாடல்...

மின்னல் தாக்கி யுவதி பலி

வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஹந்தபானாகல, கென் ஹத பகுதியில் மின்னல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்