குகதாசன் கண்டனம்

Date:

நாடாளுமன்றத்தில் நேற்று மற்றும் அதற்கு முன் நாட்களில் நாட்டில் அரிசி விலை உயர்வை பற்றி விவாதம் நடைபெற்றது. இந்த விலை உயர்வுக்கு வெள்ளம், வரட்சி போன்ற இயற்கை பேரிடர்கள் மட்டுமின்றி, அரசின் பல்வேறு திணைக்களங்களும் காரணமாக உள்ளன என சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.

தனது உரையில், முதன்மையாக தொல்பொருள் துறையின் நடவடிக்கைகள் பற்றியும் குறிப்பிட்ட இவர், தமிழ் மக்கள் பல நூற்றாண்டுகளாக விவசாயம் செய்யும் நிலங்களை, தொல்பொருள் துறை தமது பகுதியாக அறிவித்து கையகப்படுத்தி வருகிறது என அவர் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

உதாரணமாக, இந்த ஆண்டு தொடங்கி, தொல்பொருள் துறையால் திருகோணமலை மாவட்டத்தில் 380 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களை கையகப்படுத்தியதைப் பற்றி கூறியதோடு, குச்சவெளி, திரியாய், பெரும்பாளி போன்ற பகுதிகளிலும் தொல்பொருள் துறை விவசாய நிலங்களை கையகப்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக் காட்டினார்.

இவை அனைத்தும் நெல் உற்பத்தியில் பாரிய குறைவுகளை ஏற்படுத்தி நாட்டுக்கு பெரும் பாதிப்புகளை விளைவிக்கின்றன என அவர் கூறினார். இதோடு, வெள்ளத்தின் பாதிப்பை தவிர, அரசின் மற்ற துறைகளான வனத்துறை மற்றும் வனவிலங்கு துறையினராலும் விவசாய நிலங்கள் பிடிக்கப்பட்டுள்ளன.

அதன் பின்பு, கால்நடை வளர்ப்பாளர்களுக்கும், 41,361 ஏக்கர் நிலம் வனத்துறையால் பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உணவின்றி பெரும் சிரமத்திற்குள்ளாகின என்று அவர் மேலும் கூறினார்.

மேலும், துறைமுக அதிகார சபையினரால், திருகோணமலைப் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 5,572 ஏக்கர் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளமையினால் அங்குள்ள 763 குடும்பங்களின் விவசாய நடவடிக்கைகளும் பாதிக்கப்படுகின்றன.

சமூகத்தின் பல தரப்புகளில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமைக்கு அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி, இதற்கான தீர்வுகளை வழங்க வேண்டும் என குகதாசன் வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் கோலாகலம்

வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின்...

படகு கவிழ்ந்து இரு சிறுவர்கள் பலி

கற்பிட்டி களப்பில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன்,...

கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம்: நிர்வாகத் தீர்மானங்கள் சமூக நல்லிணக்கத்தை பாதிக்கக் கூடாது

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அண்மையில் உருவாகியுள்ள நிர்வாக மற்றும் பணியாளர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்